சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

தென்காசி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

தென்காசி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

author-image
WebDesk
New Update
tn govt jobs

தென்காசி மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

பாலின நிபுணர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: சமூகப்பணி மற்றும் சமூகவியல் சார்ந்த பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 21,000

தகவல் தொழில்நுட்ப பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு/ ஐ.டி மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2025/06/2025062524.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், 140/5பி, ஸ்ரீசக்தி நகர், தென்காசி மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Jobs Tenkasi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: