/indian-express-tamil/media/media_files/v23laWkv66TDS6RJ4C8K.jpg)
TET exam application
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விண்ணப்பங்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதள முடக்கம் காரணமாகப் பலர் விண்ணப்பிக்க முடியாமல் போனதால், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்று செப்டம்பர் 10, மாலை 5 மணிதான் விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக https://trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியானது. வரும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது. கடந்த திங்கட்கிழமை (செப். 8) மாலையுடன் விண்ணப்ப கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பலர் விண்ணப்பிக்க இயலவில்லை. இதனால் தமிழக அரசு மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் இன்னும் இத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள். அதேசமயம் போட்டி தேர்வில் வென்று பணியில் சேர்ந்த 45000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இது மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.