பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிட்டு ஒரு ஹாப்பி நியூஸ் தெரிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பலரும் தங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பல்வேறு பணிகளில் சேர முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்திருந்தார்கள். அண்மையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே இந்த தேர்வுகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
அவர்கள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. தமிழில் 40 மதிப்பெண் எடுக்க வேண்டும். இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அடன்படி, * 2012 டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5.5 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
* 2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்.
* 2014-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4.5 மதிப்பெண் வழங்கப்படும்.
* 2017-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
* 2019 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்கப்படும்.
2022-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 0.5 வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வு தமிழ்நாடு ஆசிரியர்கள் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 7ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“