/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இளைஞர் நீதிக் குழுமத்தில் சமூகப் பணியாளர் (Social Worker) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சமூகப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2 (ஒரு பெண், ஒரு பொது)
கல்வித் தகுதி: குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி ஆகியவற்றில் 7 ஆண்டுகள் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்கு மேலும் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thanjavur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 600010
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.