Advertisment

பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

ஜனவரி 7, 2024ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்விற்கான நுழைவு சீட்டினை 4ஆம் தேதி பிப்ரவரி 2024 அன்று நடைபெற இருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

author-image
WebDesk
New Update
teacher

ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

teachers | முன்னதாக, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, “ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

அப்போது, வரலாறு காணாத மழையால் பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது” என்றார்.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 03/2023 மற்றும் 03A/2023 68T UL. 07.01.2024 அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வானது மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.

ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வானது பிப்.4ஆம் தேதி நடத்தப்படும். ஜனவரி 7, 2024ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்விற்கான நுழைவு சீட்டினை 4ஆம் தேதி பிப்ரவரி 2024 அன்று நடைபெற இருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Teachers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment