குரூப் 1 தேர்வு முடிவுகள்: டி.எஸ்.பி ஆக தேர்வாகி இளம்பெண் சாதனை

திருவெறும்பூரைச் சேர்ந்த அபிநயா என்ற இளம்பெண் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி ஆக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

திருவெறும்பூரைச் சேர்ந்த அபிநயா என்ற இளம்பெண் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி ஆக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Thiruverumbur Abinaya

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டி.எஸ்.பி-யின் மகள், டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி ஆக தேர்வாகியுள்ளார்.

Advertisment

திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி காவல் நிலையங்களில் ஆய்வாளராகவும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் டி.எஸ்.பி ஆகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆறுமுகம். இவரது மனைவி பத்மா, துவாக்குடிமலை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஏ.பி. அபிநயா, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி பதவிக்குத் தேர்வாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகரன் ஐ.ஏ.எஸ் வழங்கினார்.

இந்தச் செய்தி வெளியானதும், திருவெறும்பூர் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், டி.எஸ்.பி ஆக தேர்வாகியுள்ள அபிநயாவிற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

செய்தி - க.சண்முகவடிவேல்

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: