/tamil-ie/media/media_files/uploads/2019/06/Tirupati.jpg)
திருப்பதி தேவஸ்தானத்தில் அருமையான வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பாடகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக நவம்பர் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோவில்களில் நடைபெறும் ஊஞ்சல் சேவையில் தாசா சாகித்ய திட்டம் சார்பில், பக்திப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. இந்த ஊஞ்சல் சேவையில் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட ஆர்வமுள்ள பாடகர்கள் மற்றும் பாடகிகள் தற்போது தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இதற்காக தேவஸ்தானத்தின் தாசா சாகித்ய திட்டம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள பாடகர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://apps.tirumala.org/dsp/மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் நேரடியாக அல்லது பிற ஊடகங்கள் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கலைஞர்கள் தங்கள் விண்ணப்பங்களை இன்று முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பித்த பாடகர்களுக்கு நவம்பர் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை திருப்பதியில் உள்ள மகதி ஆடிட்டோரியத்தில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்வு நடத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.