Advertisment

மாணவர்களே ரெடியா? திருநெல்வேலியில் அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
School Student
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 17,18-ம் தேதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

Advertisment

பலர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததில் மாணவர்கள் பலர் தங்களது பள்ளி புத்தகங்களை இழந்தனர். இந்நிலையில் பள்ளிகல்வித் துறை சார்பில் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் டிச.13-ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கின. 13-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இருப்பினும் தென்மாவட்டங்களில் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டது. அதன் பின் கனமழை மற்றும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், தென்மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 11, 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் எனவும், 

6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு ஜன.4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் எனவும் 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment