சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12 ஆம் வகுப்பு, படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12 ஆம் வகுப்பு, படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 11,916

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி - 9

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: