New Update
/indian-express-tamil/media/media_files/cSQdpDmoaZjjeatvGDNv.jpg)
திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
வழக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelors Degree in Social Work, Sociology, Criminology, Psychologyபடித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
பல்நோக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், ஒருங்கிணைந்த சேவை மையம், திருநெல்வேலி (வள்ளியூர்)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.