சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; ரூ.13,000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; உதவியாளர் பணியிடம்; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; உதவியாளர் பணியிடம்; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant  cum Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு வைத்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 01.01.2025 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,240

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/04/2025042397.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி -9

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Tirunelveli Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: