Advertisment

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் புதிதாக தொடங்கப்பட உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

மைய நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master of Social Work (MSW)/ Bachelor’s Degree in law  படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

மூத்த ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master of Social Work (MSW)/ Master Degree in Clinical Psychology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

தகவல் தொழில்நுட்ப பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Graduate with Diploma in Computer / IT படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

களப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : MSW படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,400

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/10/2023100384.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்: 35, 36 தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/10/2023100384.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment