/indian-express-tamil/media/media_files/eeUbDAALqQFo1gQXN5QC.jpeg)
Coimbatore
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.
கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 33,659 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியில் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டார்.
/indian-express-tamil/media/media_files/zeiq6NuaDbbpgjHku8sf.jpeg)
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது;கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் 127 மையங்களில் பொது தேர்வு நடைபெறுகிறது, இதில் 15,847 மாணவர்கள், 18,412 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
மன அழுத்தம் இன்றி மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் கூறியதையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளோம்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us