/indian-express-tamil/media/media_files/2025/09/03/examination-department-2025-09-03-18-55-53.jpg)
பிளஸ் 2 தேர்வுக்கான புதிய மையங்கள்: பரிந்துரைகளை சமர்ப்பிக்க தேர்வுத் துறை செப்.15 வரை அவகாசம்
2025-26ஆம் கல்வியாண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக புதிய மையங்கள் அமைக்கப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், நடப்புக் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய மையங்கள் குறித்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள் அமைக்க வேண்டிய பள்ளிகளை நேரில் ஆய்வு செய்த பின், அதற்கான காரணத்துடன் பரிந்துரை செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட இந்த விவரங்களை ரகசியமாகப் பாதுகாக்க வேண்டும். அரசின் விதிகளுக்கு முரணாக பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக் கோரினால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், 10 கி.மீ-க்கு மேல் பயணம் செய்து தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். அரசின் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையங்களாகச் செயல்பட அனுமதிக்கப்படாது.
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புதிய பொதுத் தேர்வு மையங்களுக்கான பரிந்துரை அறிக்கையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்வுத் துறை அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.