Advertisment

ஆண்டுக்கு 3 தமிழ் கூடல் நிகழ்ச்சி: 6,218 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.5.59 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ் கூடல் நிகழ்ச்சிகளை நடத்திட ஏதுவாக ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
School Education Department appoints special officers, special officers district wise to supervise education schemes, கல்வித் துறை திட்டங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு, Tamil Nadu School Education Department, special officers in district wise to supervise education schemes

ஏப்ரல் 2022 இல் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil-nadu-school-education-department: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்தும் வகையிலும், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் ஆண்டுக்கு 3 தமிழ் கூடல் நிகழ்ச்சிகளை நடத்த பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Advertisment

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையை அறிவிக்கும் போது தமிழ் அலுவல் மொழி மற்றும் தமிழ் கலாச்சார அமைச்சகத்தால் ஏப்ரல் 2022 இல் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

"அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே தமிழ் மொழி, இலக்கியத்தின் தொன்மையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும், தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த தமிழறிஞர்களை பற்றி அறியவும், 9,000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக, நடப்பு செலவினமாக, 5.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,'' என பள்ளிக் கல்வித்துறை அதன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ் கூடல் நிகழ்ச்சிகளை நடத்திட, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் பட்டியலை அந்தந்த தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.

சென்னையில் 162 பள்ளிகள், காஞ்சிபுரத்தில் 100 பள்ளிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 225 பள்ளிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 143 பள்ளிகள் தமிழ் மன்றங்கள் நடத்த பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment