தமிழகத்தில் திங்கள்கிழமை (11.12.2023) முதல் தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததைத் தொடர்ந்து, 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணியால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் திங்கள்கிழமை (11.12.2023) முதல் தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வுகள் டிசம்பா் 13 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.
6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது.
அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தோ்வுகளும் டிசம்பா் 13 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வுகள் நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“