பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அன்பில் மகேஷ் முக்கியத் தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamilnadu school Education fund

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது.  அதன்படி, தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. 

Advertisment

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. கல்வியாண்டு நாட்காட்டிபடி இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக 210 நாட்களுக்கு பதில் 220 வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்பபு தெரிவித்த பின், வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செப்.27 (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வு முடிவடைக்கிறது. 28-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3-ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, பள்ளி காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக துறை சார்ந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறினார். 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: