/tamil-ie/media/media_files/uploads/2023/06/Counselling.jpeg)
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)
தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், எந்தெந்த கோர்ஸ்களில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் 1,45,071 இடங்களுக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. இதில் முதல் சுற்று முடிவடைந்து 14,227 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் சுற்று கவுன்சலிங் தொடங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: என்ஜினீயரிங் கவுன்சலிங்: மாணவர்கள் அட்மிஷனில் டாப் 10 கல்லூரிகள்; 75% இடங்கள் முதல் ரவுண்டிலேயே நிரம்பின
இரண்டாம் சுற்றுக்கான காலியிடங்களை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி காலியிட விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். லிங்க்: https://static.tneaonline.org/docs/GENERAL-ACADEMIC-SEAT-MATRIX.pdf
இந்தநிலையில், முதல் சுற்று கவுன்சலிங் எப்படி இருந்தது? இரண்டாம் சுற்றுக்கு எந்தெந்த கோர்ஸ்களின் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன? என்பது குறித்த தகவல்களை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் ஒவ்வொரு கோர்ஸிலும் மொத்த காலியிடங்கள் எவ்வளவு? முதல் சுற்றில் நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை விளக்கியுள்ளார். முழுமையான விவரங்களை கீழ்கண்ட வீடியோவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.