பொறியியல் துணை கலந்தாய்வு; 16000 பேருக்கு ஆகஸ்ட் 21 சாய்ஸ் ஃபில்லிங் தொடக்கம்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; வியாழக்கிழமை துணை கலந்தாய்வு தொடக்கம்; 16000 மாணவர்கள் பங்கேற்பு; காலியிடங்களின் விபரம் வெளியீடு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; வியாழக்கிழமை துணை கலந்தாய்வு தொடக்கம்; 16000 மாணவர்கள் பங்கேற்பு; காலியிடங்களின் விபரம் வெளியீடு

author-image
WebDesk
New Update
tnea engineering counselling

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 21) தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வில் 16000 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதுவரை 3 சுற்று கவுன்சலிங் நிறைவடைந்துள்ளது. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.

இதற்கிடையே, 12 ஆம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறிய மாணவர்கள் ஆகியோருக்கான துணை கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 21) தொடங்கி 23 ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. இந்தக் கவுன்சலிங்கில் பங்கேற்க 16,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பி்த்துள்ளனர். இந்த கவுன்சலிங்கிற்கான காலியிட விபரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

துணை கலந்தாய்வு முடிவடைந்த பிறகு, பொறியியல் படிப்பில் எஸ்.சி அருந்ததியர் ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களில், எஸ்.சி மாணவர்கள் சேருவதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 25, 26 ஆம் தேதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியுடன் ஒட்டு மொத்த கலந்தாய்வு பணிகள் முடிக்கப்படும்.

Engineering Counselling Tn Engineering Admissions

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: