New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Govt-restricts-import-of-laptop.jpg)
பொறியியல் படிக்க விரும்புபவர்களின் பெரு விருப்பமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் உள்ளன. எனவே இந்தத் துறையில் கிடைக்கப் பெறும் வேலை வாய்ப்புகள் குறித்து இப்போது தெரிந்துக் கொள்வோம்.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்ஜினியரிங் படிப்பை பொறுத்தவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு மவுசு அதிகமாக உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்கலாம். இந்தத் துறையில் நுழைவு நிலையிலே 2 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இதனைத் தவிர க்ளவுட் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்ப்யூட்டிங், ஆர்டிஃபிலியல் இண்டலிஜென்ஸ், மெசின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் சார்ந்த ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம் இந்தத் துறைகளில் சாதிக்க கோடிங் திறனுடன் பிற திறன்களையும் படித்துக் கொள்ள வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.