பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், சுமார் 30000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.
இந்தநிலையில், இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
இரண்டாம் சுற்றில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், முதல் சுற்றில் சீட் ஒதுக்கீடு இல்லை (Not allotted) போன்ற காரணங்களால் சுமார் 16%, அதாவது 6482 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
முதல் சுற்றில் சுமார் 18000 மாணவர்கள் மட்டுமே கிடைத்த கல்லூரியை ஏற்றுக் கொண்டுள்ளனர். 50% மாணவர்கள் ஒதுக்கீட்டை ஏற்காமல், வேறு கோர்ஸ்க்கு அப்வர்டு கொடுத்துள்ளனர். சாய்ஸ் ஃபில்லிங்கில் செய்த தவறு தான் மாணவர்கள் கிடைத்த கோர்ஸை ஏற்க முடியாததற்கு காரணம் ஆகும்.
சில மாணவர்கள் கட்டண விபரம் தெரியாமல் கல்லூரிகளை தேர்வு செய்து சேர முடியாமல் தவிக்கின்றனர். மேலும் துணைக் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். எனவே கல்லூரி கட்டணத்தை தயார் செய்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் கல்லூரிகளை சாய்ஸில் வையுங்கள்.
டாப் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் முடிவடைந்துவிட்டன. சில கோர்ஸ்கள் மற்றும் சில இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மட்டுமே டாப் கல்லூரிகளில் இடங்கள் உள்ளன. 170க்கு மேல் 20000க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். எனவே அதற்கு கீழ் கட் ஆஃப் உள்ளவர்கள், உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ள கல்லூரிகளையும், கூடுதல் சாய்ஸ்களையும் கொடுப்பது நல்லது.