/indian-express-tamil/media/media_files/2025/05/12/oXI8QVWZyVK9vu2qzT6H.jpg)
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எவ்வளவு இடங்கள் கிடைக்கும்? கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் அதிகமான பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எவ்வளவு இடங்கள் கிடைக்கும்? கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பது கேரியர் கைடன்ஸ் அசோக் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
7.5% அரசு ஒதுக்கீட்டு பிரிவுக்கு சுமார் 16000க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கும். இதில் ஓ.சி – 4960, பி.சி – 4240, பி.சி.எம் – 560, எம்.பி.சி – 3200, எஸ்.சி – 2400, எஸ்.சி.ஏ – 480, எஸ்.டி – 160 இடங்கள் என ஒதுக்கப்படும். இந்த 7.5% ஒதுக்கீட்டு தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பி.சி – 147
பி.சி.எம் – 141
எம்.பி.சி – 157
எஸ்.சி – 135.5
எஸ்.சி.ஏ – 136
எஸ்.டி - 134
இந்த கட் ஆஃப் ரேஞ்சில் உள்ளவர்களுக்கு நிச்சயம் சீட் கிடைக்கும். இதனை விட குறைவாக கட் ஆஃப் உள்ளவர்களுக்கும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.