தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் கூடுமா? குறையுமா? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 12 ஆம் வகுப்பில் கணிதம் (50%), இயற்பியல் (25%), வேதியியல் (25%) பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்பிடையிலே நடைபெறும்.
இந்தநிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் கூடுமா? குறையுமா? என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக கல்வியாளர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
Advertisment
Advertisements
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைபெற்றுள்ளன. இந்தநிலையில், இந்த ஆண்டு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் சென்டம் குறைவாக வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட நிச்சயம் குறையவுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு நிச்சயமாக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் குறையும். 1.25 – 1.75 வரை டாப் கட் ஆஃப் ரேஞ்சில் குறைய வாய்ப்புள்ளது. ஆவரேஜ் கட் ஆஃப் ரேஞ்ச் முதல் இறுதி கட் ஆஃப் ரேஞ்ச் வரை இன்னும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக 1.75 முதல் 15 வரை கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம் 160 – 170 கட் ஆஃப்க்கு மேல் எடுத்தவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.