/indian-express-tamil/media/media_files/VGZfTkhPSsWvk3hoSi4d.jpg)
ஜே.இ.இ முதன்மைத் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான டாப் சுயநிதி பல்கலைக்கழகங்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தமிழக மாணவர்கள் பெரும்பாலும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.
அதேநேரம் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் தகுதி பெறுவதன் மூலம் ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட தலைசிறந்த நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம். மேலும், தமிழகத்தில் உள்ள டாப் சுயநிதி கல்லூரிகள் ஜே.இ.இ மெயின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கை வழங்குகின்றன. சில பல்கலைக்கழகங்கள் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் சுயநிதி கல்லூரிகள் எவை என்பது யு.கே.வி தமிழா யூடியூப் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
1). வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, வேலூர்
2). அமிர்தா பல்கலைக்கழகம், கோவை
3). எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், சென்னை
4). சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
5). சவீதா பல்கலைக்கழகம், சென்னை
6). சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை
7). வேல் டெக் பல்கலைக்கழகம், சென்னை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.