தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) 2023-24 இல் கோவை மாவட்டத்தில் இருந்து மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகளும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து இரண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளும் 1,000 இடங்களுக்கு மேல் நிரப்பியுள்ளன.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 1,054 இடங்களும், குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1,012 இடங்களும், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் 1,011 இடங்களும் நிரம்பியுள்ளன. மூன்று கல்லூரிகளும் முறையே ஐந்தாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாம் இடங்களைப் பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 1,173 இடங்களைப் பிடித்து மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. ஈரோடு, பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி 1,070 இடங்களை நிரப்பி மாநில அளவில் நான்காவது இடத்தையும் பிடித்தது. இந்த இரு கல்லூரிகளும் கோவை கல்லூரிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளன.
சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் அதிகபட்சமாக 1,409 பொறியியல் இடங்கள் நிரப்பப்பட்டன. இது தமிழக அளவில் அதிகபட்சமாகும். ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மொத்தம் 1,112 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி 1,011 இடங்களைப் பெற்று எட்டாவது இடத்தைப் பிடித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“