scorecardresearch

என்ஜினீயரிங் ‘சீட்’-க்கு இதுவரை 1.17 லட்சம் பேர் விண்ணப்பம்; கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் குவியும் மாணவ, மாணவிகள்

பொறியியல் படிப்புக்கு அதிகரித்த மவுசு; 10 நாட்களில் 1.17 லட்சம் பேர் விண்ணப்பம்; கடைசி தேதி ஜூன் 4

engineering
பொறியியல் கலந்தாய்வு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கிய 10 நாட்களுக்குள், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு (TNEA) விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1.17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கிற்கு 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்: Anna University News: பி.இ, பி.டெக் படிக்க 5% தொழிற்சாலை கோட்டா; அட்மிஷன் நடைமுறை எப்படி?

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் விண்ணப்பப் பதிவு, பணம் செலுத்துதல், கல்லூரிகள் தேர்வு செய்து நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்தல் உள்ளிட்ட முழுமையான செயல்முறையும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தமிழக உயர்கல்வித் துறையின் ஒரு பிரிவான தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) அறிவித்துள்ளது.

”தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பொறியியல் இடங்களுக்கு மே 5 ஆம் தேதி ஆன்லைன் பதிவு தொடங்கியது, மே 15 ஆம் தேதி வரை 1,17,996 மாணவர்கள் அதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, 69,048 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர், 32,360 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர், ”என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை பொறுப்பாளர் டி.புருஷோத்தமன் கூறினார்.

இந்தநிலையில், ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி ஜூன் 4 ஆம் தேதி ஆகும். ரேண்டம் எண் ஜூன் 5 ஆம் தேதி ஒதுக்கப்படும். தரவரிசை பட்டியல் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் ஆகஸ்ட் 2 முதல் கவுன்சிலிங் தொடங்கும். முதலில் சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைப்படுவர். பின்னர் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு நான்கு சுற்று கவுன்சிலிங் நடைபெறும். முழு பொறியியல் சேர்க்கை செயல்முறை அக்டோபர் 3 ஆம் தேதி முடிவடையும்.

பொறியியல் சேர்க்கைக்கு மாணவர்களிடம் உள்ள ஆர்வம் குறித்து கூறுகையில், “பொறியியல் கல்லூரிகளில் மேம்படுத்தப்பட்ட கேம்பஸ் வேலைவாய்ப்புகளைப் பார்க்கும்போது, ​​​​மாணவர்கள் கணினி அறிவியல் மற்றும் தொடர்புடைய பிரிவுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதைச் சேர்த்து, நீட் மறுதேர்வர்கள், பி.எஸ்.சி இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக பொறியியல் படிக்க விரும்புகிறார்கள்,” என்று கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி கூறினார்.

இந்த ஆண்டு, பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் குறைந்தது 40,000 முதல் 50,000 வரை உயரும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, பல பொறியியல் கல்லூரிகள் கணினி அறிவியல் மற்றும் அது தொடர்பான கிளைகளில் கூடுதல் இடங்களைச் சேர்த்து வருகின்றன, என கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தங்களது இடங்களை அதிகரிக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnea engineering applications crossed one lakhs above in 10 days