தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாவட்டம், எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மேளக்குழு
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சான்றிதழ் அல்லது தமிழ்நாடு அரசு அல்லது மதம் சார்ந்த இசைப் பள்ளி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,300 – 48,700
பரிச்சாரகர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோயில் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,200 – 41,800
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,600 – 39,900
அத்யாபாகம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் ஆகமப் பள்ளி அல்லது அரசு சார்ந்த வேத பாட சாலையில் 3 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,600 – 36,800
பகல்/ இரவு காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,600 – 36,800
இரவு காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,700 – 33,700
திருவலகு
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 31,500
திருவலகு
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 6,900 – 21,500
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/230/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எண். 6, எல்.என்.பி கோயில் தெரு, எழும்பூர் சென்னை - 600008
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.