/indian-express-tamil/media/media_files/OS9rkVnV8vFZ0jKKBhGl.jpg)
இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எழுத்தர், கணினி பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,300 – 48,700
கணினி பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: கணினி அறிவியலில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,300 – 48,700
நாதஸ்வரம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் நாதஸ்வரம் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,300 – 48,700
தோட்டம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,600 – 36,800
திருவலகு
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 31,500
வயதுத் தகுதி: 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கhttps://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610204.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.phpஎன்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.