தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உதவியாளர் மற்றும் இசை சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கட்டியம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகமப்பள்ளியில் ஓராண்டு காலம் பாடநெறி அல்லது மத நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் வேத பாடசாலையில் படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 11,600 – 36,800
உதவி சுயம்பாகம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு நெய்வேத்திய பிரசாதங்கள் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
திருமஞ்சனம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகமப்பள்ளியில் ஓராண்டு காலம் பாடநெறி அல்லது மத நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் வேத பாடசாலையில் படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 11,600 – 36,800
மாலைகட்டி
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் நித்தியப்படி பூஜை மற்றும் உற்சவங்களில் சாத்துப்படி செய்வதற்கான அலங்கார மலர் மாலைகள் தொடுப்பதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
வயலின்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மதநிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பயிற்சி பள்ளியில் இருந்து அதன் தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,700 – 50,000
புல்லாங்குழல்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மதநிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பயிற்சி பள்ளியில் இருந்து அதன் தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,700 – 50,000
சலவையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 11,600 – 36,800
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://palanimurugan.hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/32203/651/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் - 624601
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://palanimurugan.hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/32203/651/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil