தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை வடபழநி அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் உதவியாளர், தட்டச்சர், ஓட்டுனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: SBI PO 2022; டிகிரி தகுதி; எஸ்பிஐ-ல் 1673 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
இளநிலை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
தட்டச்சர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
உதவி மின் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் அல்லது வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,600 – 52,400
நாதஸ்வரம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் நாதஸ்வரத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,500 – 62,000
உதவி அர்ச்சகர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் அர்ச்சகர் படிப்பில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 50,400
உதவி பரிச்சாரகம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்தியம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
உதவி சுயம்பாகம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்தியம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
வேதபாராயணம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆகமப்பள்ளியில் வேதபாராயணத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,700 – 50,000
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.09.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை - 26
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil