/indian-express-tamil/media/media_files/2025/07/14/tnpsc-exam-2025-07-14-16-44-00.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. மொத்தம் 72 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 2.49 லட்சம் தேர்வர்கள் எழுதினர்.
இந்த நிலையில் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவர். முதன்மைத் தேர்வு வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முதல் நிலைத் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் குரூப் 1 தேர்வுக்கான முடிவுகளும் குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளும் தனித்தனியே வெளியிடப்பட்டிருக்கும்.
அந்த இணைப்புகளை கிளிக் செய்தால் புதிய பக்கத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் திரையில் தோன்றும்.
அதில் தேடுதல் பொறி மூலம் உங்களது பதிவெண்ணை உள்ளிட்டு, தேர்ச்சி விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள பி.டி.எஃப் கோப்புகள் மூலமாக நேரடியாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.