/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-19-at-15.53.54.jpeg)
கோவை பீளமேடு பகுதியிலுள்ள நேஷனல் மாடல் பள்ளியில் இன்று TNPSC குரூப் 1 பொது தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தில் 45 அறைகளில் 900 தேர்வர்கள் இந்த தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த ஐஸ்வர்யா குரூப் 1 தேர்வு எழுத வந்துள்ளார். அப்போது கூகுள் மேப்பில் நேஷனல் மாடல் பள்ளி அவிநாசி சாலை என காட்டியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஆண்டுதோறும் 3000 விசா வழங்க இங்கிலாந்து திட்டம்; இந்திய மாணவர்கள் உற்சாகம்
இதனையடுத்து அங்கு சென்றவர் பள்ளி அங்கு இல்லை என்பதையடுத்து பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். கடைசியாக நேஷனல் மாடல் பள்ளிக்கு வந்தபோது மணி காலை 9.05 மணி ஆகியுள்ளது. ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே விட மறுத்துள்ளனர்.
இது குறித்து ஐஸ்வர்யா கூறியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வுக்காக நான் தயாராகி வந்தேன். பள்ளி நிர்வாகம் கூகுள் மேப்பை அப்டேட் செய்யப்படாததால் எனது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இதேபோல இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுதாமல் திரும்பிச் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மற்ற மையங்களில் தேர்வு எழுத வந்தவர்கள் 9.30 மணி அனுமதிக்கப்பட்ட நிலையில், தாங்கள் அனுமதிக்கப்படாதது வருத்தமளிப்பதாகவும், அரசு எங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமெனவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.