/tamil-ie/media/media_files/uploads/2022/05/tnpsc-exams-1.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A, குரூப் 4 தேர்வு எழுதி, ரிசல்ட்க்காக காத்திருப்பவர்களுக்கும் தேர்வாணையம் நம்பிக்கை அளிக்கும் செய்தியை அறிவித்துள்ளது. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை மே 21 ஆம் தேதி நடத்தியது. அப்போது முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்டில் வெளியிடப்படவில்லை. அதன்பின்னர் செப்டம்பர் இறுதியில் வெளியாகலாம் என கூறப்பட்டு, பின்னர் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இதேபோல் குரூப் 4 பதவிகளுக்கானத் தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, ஒரு மாதங்களுக்கு மேலாகும் நிலையில், தீர்ப்புக்கு ஏற்றவாறு தேர்வாணைய முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து தேர்வு முடிவுகள் தயாராக உள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது. எனவே குரூப் 2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் எந்த நேரத்திலும் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது அக்டோபர் கடைசி வாரம் தொடங்க உள்ள நிலையில், இந்த வார இறுதிக்குள் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதேபோல் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் இரண்டு வாரங்களுக்குள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ள தேர்வர்கள், தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.