Advertisment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ இலவச பயிற்சி; விண்ணப்பிக்க அழைப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,2ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடக்கம்; விருப்பமுள்ளவர்கள் பயிற்சியில் சேர அழைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC VAO Recruitment 2019

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது;

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 2 தேர்வில் 507 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ தேர்வில் 1820 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 2327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்தாண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வானது செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்டது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்தாண்டு ஜூலை 18 அன்று தொடங்கப்பட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 15 நபர்கள் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisment
Advertisement

மேலும், தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்தாண்டு அக்டோபர் 14 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த படிவ நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விவரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment