/indian-express-tamil/media/media_files/plC0FPZ8ppyWHogHwNJn.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 20) ஒரு நாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் கால அவகாசம் நிறைவுடைந்த நிலையில் இன்று இரவு வரை நீட்டிப்பு. தொழில்நுட்ப காரணத்தால் இணைய வழியாக கட்டணம் செலுத்துவதில் சிக்கல் இருந்ததால், அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் ஏ பணியிடங்கள் என மொத்தம் 2,327 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.
முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மெயின்ஸ் தேர்வு நடைபெறும். இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஜூலை 19) கடைசி நாள் எனக் கூறப்பட்ட நிலையில், தொழில்நுட்ப காரணத்தால் இன்று ஒரு நாள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இன்று இரவுக்குள் சென்று தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.