Advertisment

TNPSC Group 2: அரை மணி நேரத்திற்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது; தேர்வு அறை விதிமுறைகள் கவனித்தீர்களா?

TNPSC குரூப் 2 தேர்வு; தேர்வு அறைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும், தேர்வில் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளும் இங்கே

author-image
WebDesk
New Update
TNPSC Group 2: தாமதத்திற்கு 2 காரணம்... குரூப் 2 ரிசல்ட் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்

TNPSC group 2 exam hall tips for aspirants: குரூப் 2 தேர்வுக்கு 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு அறைகளில் அனுமதிக்கப்பட மாட்டார் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்தநிலையில், தேர்வு கூடத்திற்கு எத்தனை மணிக்குச் செல்ல வேண்டும், தேர்வறையில் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெறும். 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வுக் கூட அறைக்கு வர வேண்டும். 9 மணிக்குப் பிறகு, அதாவது 8.59க்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 11,78,175 பேர் குரூப் 2 தேர்வை எழுத உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. என்று கூறினார்.

இந்த நிலையில் தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இப்போது பார்ப்போம். முதலில் தேர்வர்கள் பாசிட்டிவ் ஆன மனநிலையில் தேர்வறைக்குச் செல்ல வேண்டும். தேர்வுக்கு தேவையான ஹால்டிக்கெட், பேனா உள்ளிட்ட பொருட்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வர்கள் இது முதல்நிலை தேர்வு என்பதால், எத்தனை வினாக்களுக்கு விடையளித்தல் நமக்கு நல்லது முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு தெரிந்த வினாக்களாக இருந்தால் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கலாம்.

தேர்வு கூடத்திற்கு முடிந்தவரை 8 மணியிலிருந்து 8.30 மணிக்குள் செல்வதுபோல் தயாராகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், ஏதேனும் சிறு தாமதம் ஏற்பட்டாலும், 8.59 க்குள் உள்ளே சென்று விடலாம். ஏனெனில் 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதி இல்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. எனவே கஷ்டப்பட்டு, ஒரு சில வருடங்களாக படித்து வந்த நிலையில், அது வீணாகாமலும், அடுத்த தேர்வுகளுக்கு காத்திருப்பதைத் தடுக்கவும், தேர்வு மையத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள்.

இதையும் படியுங்கள்: 21-ம் தேதி TNPSC Group 2: எந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள்? பாலச்சந்திரன் பேட்டி

அடுத்ததாக ஓ.எம்.ஆர் தாள் உங்களுக்கு கொடுக்கப்பட்டவுன், அது உங்களுக்கு உரியது தானா என நன்றாக சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஓ.எம்.ஆர் மாறியிருந்தால், உங்கள் விடைத்தாள் நிராகரிக்கப்படவோ அல்லது மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படவோ வாய்ப்புள்ளது. பின்னர் ஓ.எம்.ஆர் படிவத்தில் தேவையான விவரங்களை கவனமுடன் நிரப்புங்கள்.

தேவைப்படுபவர்கள் கைக்கடிகாரம் அணிந்து செல்லலாம். தேர்வறையில் மேற்பார்வையாளர்கள் உங்களுக்கு நேரம் குறித்த தகவல்களை வழங்கலாம். இருப்பினும் தேவைப்படுபவர்கள் அணிந்து செல்லலாம். ஆனால் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சாதாரண வாட்ச்களை அணிந்து செல்லுங்கள்.

வினாக்களை ஒரு முறைக்கு இருமுறை படித்து தெளிவான பின் விடையளியுங்கள். பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கு கூடுதல் கவனமுடன் செயல்படுங்கள். மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து உங்கள் தேர்வை சிறப்பாக எழுதுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment