/tamil-ie/media/media_files/uploads/2017/11/tnpsc-notification.jpg)
TNPSC குரூப் 2 தேர்வு : நவம்பர் மாதம் 11ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றது. சுமார் 6 லட்சம் தேர்வர்கள் இந்த தேர்வினை தமிழகத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் எழுதியுள்ளனர்.
TNPSC குரூப் 2 தேர்வு : தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்
இந்த வினாத்தாள் குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தது. தந்தை பெரியார் குறித்த பதில் ஒன்றில், தந்தை பெரியாரின் சாதியப் பெயரையும் உள்ளே இணைத்திருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பல்வேறு தரப்பினர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். அது குறித்து முழுமையான செய்திகளை படித்து தெரிந்து கொள்ள.
இந்நிலையில் அந்த வினாத்தாளில் 6 தவறான கேள்விகள் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்து வந்தன. அந்த 6 தவறான கேள்விகளுக்கு 9 கருணை மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று TNPSC அறிவித்துள்ளது. இதனால் தேர்வை எழுதியவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.