குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், இளநிலை வருவாய் ஆய்வாளர், வனக் காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 3,935 காலி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான தேர்வு வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 25 முதல் மே 24 ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம்.
வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான நேரம்! உடனே விண்ணப்பியுங்க!