Advertisment

TNPSC Group 4 Exam: தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண்?

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1-க்கு கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறை, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-லும் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc, tnpsc group 4, tnpsc group 4 answer key, tnpsc group 4 answer key download 2019

tnpsc, tnpsc group 4, tnpsc group 4 answer key, tnpsc group 4 answer key download 2019

TNPSC Group 4 Answer Key Download 2019 @tnpsc.gov.in டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை அளித்தாலே முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம்.

Advertisment

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி, ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 1ம் தேதி குரூப் 4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. இந்த தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

சில தவறுகள் இங்கு தரப்படுகின்றன. அவை வருமாறு:

01. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்வு வினாத்தாளில் அது குறித்த கேள்விக்கு அக்டோபர் 12, 20,21 மற்றும் அக்டோபர் 25 என்ற 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 12 ல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

02. 1951ம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் பங்கேற்ற கட்சிகள் என்ற கேள்விக்கு 54,64,74 மற்றும் 84 என்ற 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், சரியான விடை 53 ஆகும்.

03. ஜீரோ டிகிரி லாங்கிடியுட் மற்றும் ஜீரோ டிகிரி லாட்டியுட் கொண்ட இடம் என்ற கேள்விக்கு தெற்கு அட்லாண்டிக் மற்றும் ஆப்ரிக்காவின் மேற்கு பகுதி விடைகளாக கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், மேற்கு ஆப்ரிக்கா என்பதே சரியான விடை ஆகும்.

04. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு உரிமைகள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஆனால், வினாத்தாளில் கடமைகள் என்று குறிக்கப்பட்டிருந்தது.

05. சரியான விடையை பொருத்துக பிரிவில் ஆங்கிலத்தில் முதலாம் லோக்சபா கலைப்பு என்ற இடத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாக குடியரசு தினம் என்று இருந்தது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிய 13 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கும், இந்த தவறான கேள்விகளுக்கு என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விலும் இதேபோல சில தவறான கேள்விகள் இடம் பெற்றன. டி.என்.பி.எஸ்.சி சார்பில் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான விடைகளிலும் சில தவறாக இருந்தன.

TNPSC Exam News: சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு, குரூப் 4 தேர்வர்களின் எதிர்பார்ப்புக்கு விடை எப்போது?

இது தொடர்பாக சிலர் நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தாக்கல் செய்த அபிடவிட்டில், ‘தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்’ என கூறியது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 1-க்கு கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறை, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-லும் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான் சந்தேகங்களுக்கு பதில்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள், கட் ஆஃப் மார்க் விவரங்கள் எந்த நேரமும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும். அதையொட்டி தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment