Advertisment

குரூப்- 4 காலிப் பணியிடங்கள் மீண்டும் உயர்வு; மொத்தம் 9,532 ஆக அதிகரிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்- 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்தி அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TNPSC office x

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது.  

Advertisment

இந்த நிலையில், குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறும். கடந்தாண்டு குரூப்-4 தேர்வு ஜுன் 9-ம் தேதி நடைபெற்றது. இதில், 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதினர். 

அப்போது, காலிபணியிடங்கள் 6,244 ஆக இருந்தது. கடந்தாண்டே குரூப்- 4 காலிப் பணியிடங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டது. 9,491 காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது காலிப் பணியிடங்கள் மீண்டும் உயர்தப்பட்டுள்ளது. கூடுதலாக 41 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment