/tamil-ie/media/media_files/uploads/2017/11/tnpsc-notification.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் தற்போது 9491 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் எனக் குறிப்பிடப்படுவது 300 மதிப்பெண்களுக்கு அல்லாமல், 200 கேள்விகளுக்கு எத்தனை சரியான கேள்விகள் என்பதே ஆகும்.
அந்தவகையில், பொதுப் பிரிவினருக்கு 164 – 167, பி.சி பிரிவினருக்கு 163 – 166, எம்.பி.சி பிரிவினருக்கு 163 – 166 ஆக இருக்க வாய்ப்புள்ளது. பி.சி முஸ்லீம் பிரிவினருக்கு 156 – 159, எஸ்.சி பிரிவினருக்கு 160 – 163, எஸ்.சி.ஏ பிரிவினருக்கு 158 – 163, எஸ்.டி பிரிவினருக்கு 155 – 159 என்ற அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.