/tamil-ie/media/media_files/uploads/2023/08/TNPSC-Group-4.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 559 காலிப் பணியிடங்களைச் சேர்த்து தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் புதிதாக 2208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 8932 ஆக உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில், இன்று குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதேநேரம் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களையும் தேர்வாணையம் உயர்த்தி உள்ளது. அந்த வகையில் 559 சேர்க்கப்பட்டு காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 9491 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி புதிய காலியிடங்களின் எண்ணிக்கை
கிராம நிர்வாக அலுவலர் – 402
வனக்காவலர் – 559
வனக் கண்காணிப்பாளர் – 645
வனக் கண்காணிப்பாளர் (பழங்குடியினர்) – 220
வனக் கண்காணிப்பாளர் (ஓட்டுநர் உரிமம்) – 176
இளநிலை உதவியாளருடன் கூடிய தட்டச்சர் – 43
இளநிலை உதவியாளர் (போக்குவரத்து கழகம்) – 17
நிர்வாக அலுவலர் - 30
அதேநேரம் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.