TNPSC Group 4: கணிதத்தில் 25-க்கு 23 மார்க் ஈஸியா எடுக்கலாம்; குரூப் 4 தேர்வுக்கு இப்படி பயிற்சி செய்தால் வெற்றி உறுதி!

TNPSC Group 4 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு; கணிதம் மற்றும் திறனறி பிரிவில் 23 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க எப்படி படிக்க வேண்டும்? எவ்வளவு நாட்கள், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்? வெற்றிக்கான சிம்பிள் சூத்திரம் இங்கே

TNPSC Group 4 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு; கணிதம் மற்றும் திறனறி பிரிவில் 23 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க எப்படி படிக்க வேண்டும்? எவ்வளவு நாட்கள், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்? வெற்றிக்கான சிம்பிள் சூத்திரம் இங்கே

author-image
WebDesk
New Update
TNPSC

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், கடினமான கணிதம் மற்றும் திறனறி பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.

குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் எளிதான பகுதியாக தேர்வர்களால் கருதப்படும். பொது அறிவு எப்போது கடினமான பகுதியாக கருதப்படும். அதேநேரம் கணிதம் மற்றும் திறனறி அடங்கிய பகுதியும் சற்று கடினமானதாக உணரப்படும். ஆனால் சில டெக்னிக் மற்றும் சரியான பயிற்சியுடன் படித்தால் கணிதம் மற்றும் திறனறி பகுதியிலும் அதிக மதிப்பெண் பெறலாம்.

Advertisment
Advertisements

குரூப் 4 தேர்வில் கணிதத்தில் 15 கேள்விகள், திறனறி பகுதியில் 10 கேள்விகள் என மொத்தம் 25 கேள்விகள் இடம்பெறும். இந்தநிலையில், கணித பகுதியை தேர்வின் கடைசி நேரத்தில் முயற்சிப்பது தவறான அணுகுமுறை என விருட்சம் டி.என்.பி.எஸ்.சி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது. வரிசையாக கேள்விகளை முயற்சிக்கும் போதே, கணித பகுதிக்கும் விடையளிக்கலாம். தெரியாத கேள்விகளை வேண்டுமானால் கடைசியில் முயற்சிக்கலாம். கடைசியாக முயற்சிக்கலாம் என அனைத்து கேள்விகளையும் ஒதுக்கினால், நேரமின்மையால் முடிக்க முடியாமல் போகலாம்.

சுருக்குக, சராசரி, விகிதம், மீ.சி.ம. மீ.பெ.வ., தனிவட்டி, கூட்டு வட்டி, வேலை மற்றும் நேரம், பரப்பளவு, கன அளவு போன்ற பிரிவுகளில் எத்தனை வகையான வினாக்கள் இருக்கிறதோ, அத்தனையையும் முயற்சி செய்யுங்கள். மேலும் தேவையான ஃபார்முலாக்களை மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள்.

இதேபோல், திறனறி பகுதியிலும் தருக்க காரணவியல், பகடை, புதிர்கள், காட்சிகள், எண் வரிசை போன்ற பிரிவுகளுக்கும் அனைத்து வகை வினாக்களையும் முயற்சி செய்து பார்த்துக் கொள்ளுங்கள். 

ஒட்டுமொத்தமாக கணித பகுதிக்கு தினமும் 1-2 மணி நேரம் ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். தலைப்பு வாரியாக முதல் பயிற்சி செய்து, பின்னர் ஒட்டுமொத்த தேர்வுகளை எழுதுங்கள். அடுத்ததாக முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் கேட்கப்பட்ட வினாக்களை பயிற்சி செய்யுங்கள். இந்த கேள்விகள் மீண்டும் கேட்கப்பட வாய்ப்புள்ளது.

Tnpsc Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: