/indian-express-tamil/media/media_files/2025/07/14/tnpsc-exam-2025-07-14-16-44-00.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்து தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து அட்டா247 தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. இங்கு கட் ஆஃப் மதிப்பெண் எனக் குறிப்பிடுவது கேள்விகளின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு - 156
பி.சி - 153
பி.சி.எம் – 146
எம்.பி.சி – 152
எஸ்.சி – 148
எஸ்.சி.ஏ - 143
எஸ்.டி – 140
இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3 மதிப்பெண்கள் கூடுதலாகவோ குறைவாகவோ வரலாம்.
தட்டச்சர் பதவிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு - 150
பி.சி - 148
பி.சி.எம் – 140
எம்.பி.சி – 143
எஸ்.சி – 138
எஸ்.சி.ஏ - 135
எஸ்.டி – 130
இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3 மதிப்பெண்கள் கூடுதலாகவோ குறைவாகவோ வரலாம். சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு தட்டச்சர் கட் ஆஃப் மதிப்பெண்களில் 8 – 10 மதிப்பெண்கள் வரை குறைவாக வர வாய்ப்பு இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.