/indian-express-tamil/media/media_files/2025/07/14/tnpsc-exam-2025-07-14-16-44-00.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ள நிலையில், கிரேஸ் மார்க் இருக்குமா? கட் ஆஃப் உயருமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் குரூப் 4 தேர்வில் கிரேஸ் மார்க் இருக்குமா? கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பது பாரி அகாடமி என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது.
வீடியோவின்படி, குரூப் 4 தேர்வில் 3-4 கருணை மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழில் 80 கேள்விகள், பொது அறிவில் 52 கேள்விகள், கணிதத்தில் 20 கேள்விகள் என்ற அளவில் எடுத்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. கட் ஆஃப் மதிப்பெண்ணை பொறுத்தவரை 148-149 என்பதிலிருந்து 152-153 ஆக உயர வாய்ப்புள்ளது.
அதேநேரம் காலியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டால், கட் ஆஃப் குறையும். கருணை மதிப்பெண்களை பொறுத்தவரை அனைவருக்கும் அளிக்கப்பட்டால், கட் ஆஃப் உயருமே தவிர, வேறு எந்த மாற்றத்தையும் தராது. 150 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்தவர்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். அதற்கு கீழ் எடுத்தவர்களுக்கு காலியிடங்கள் அதிகரித்தால் கிடைக்க வாய்ப்பு இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.