scorecardresearch

TNPSC Group 4 தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்… காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

TNPSC Group 4: குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு காலியிடங்கள் அதிகரிப்பு; தேர்வாணையம் முக்கிய அப்டேட்

TNPSC Group 4 தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்… காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கூடுதலாக 2500 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரிசல்ட் வெளியிடுவது குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: UPSC Exam: இந்தியா- சீனா உறவு, அமெரிக்க பனிப்புயல், வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய சில டாபிக்ஸ் இங்கே!

இதனால் தேர்வர்கள் கவலையடைத்திருந்த நிலையில், மகிழ்ச்சியான செய்தியை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதாவது குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை தேர்வாணையம் உயர்த்தியுள்ளது. அறிவிப்பில் 7301 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 2500 சேர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கை 9870 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தேர்வு முடிவுகளை விரைந்து எதிர்ப்பார்க்கின்றனர். இதற்கிடையில் காலியிடங்கள் அதிகரிப்பால் கட் ஆஃப் மதிப்பெண் கணிசமாக குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc group 4 vao exam vacancies increased