TNPSC 2020: 69 பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-1 தேர்வு : முழு அறிவிப்பானை வெளியீடு
TNPSC Group 1 Notification: இந்த ஆண்டு குரூப் I தேர்வு 18 துணை ஆட்சியர், 19 காவல்துறை துணை கண்காணிப்பாளர உட்பட்ட மொத்த 69 காலி பணியிடங்களுக்கு நடைபெறும்.
TNPSC Group 1 Notification: இந்த ஆண்டு குரூப் I தேர்வு 18 துணை ஆட்சியர், 19 காவல்துறை துணை கண்காணிப்பாளர உட்பட்ட மொத்த 69 காலி பணியிடங்களுக்கு நடைபெறும்.
Tamil News Today Live : செயலாளர் நந்தகுமார் பேட்டி
TNPSC Exams Notification: துணை ஆட்சியர்,காவல்துறை துணை கண்காணிப்பாளர, உதவி ஆணையாளர் (வணிக வரி), துணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), உதவி இயக்குநர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட அலுவலர் (தீ மற்றும் மீட்பு சேவைகள்) போன்ற பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு முழு அறிவிப்பானையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
இந்த ஆண்டு குரூப் I தேர்வு 18 துணை ஆட்சியர், 19 காவல்துறை துணை கண்காணிப்பாளர உட்பட்ட மொத்த 69 காலி பணியிடங்களுக்கு நடைபெறயிருக்கிறது.
Advertisment
Advertisements
குரூப் I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும். இதற்கான விண்ணப்ப செயல்முறை நேற்று (ஜன.20)முதல், அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை தேர்வு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
வயது வரம்பு: உதவி ஆணையாளர் தவிர்த்து அனைத்து பணிகளுக்கும் தேர்வர்கள் குறைந்தது 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்),ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர் போன்ற பிரிவு தேர்வர்களுக்கு அதிகபட்ச வயது 37 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மற்ற பிரிவு தேர்வர்களுக்கு அதிக பட்ச வயது 32 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வாயிலாக ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
தேர்வுமுறை: முதல்நிலை தேர்வில் History, Culture, Heritage and Socio–Political Movements in Tamil Nadu (தமிழ் சமூகத்தின் வரலாறு)
Development Administration in Tamil Nadu (தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான நிர்வாகம்) என்று இரண்டு பிரிவுகள் கூடுதலாக சேர்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஆப்டிடியூட் கேள்விகளின் எண்ணிக்கை குறைத்துள்ளது டிஎன்பிஎஸ்சி. ஆப்டிடியூட் புகுதிகளில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்பட்டு வந்திருந்த நிலையில், தற்போது 25-க சுருக்கப்பட்டுள்ளது