Advertisment

டிஎன்பிஎஸ்சி ஜெயிலர் பணி ஆட்சேர்ப்பு - 116600 வரை சம்பளம்

குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் முடித்தோருக்கு முன்னுரிமை  அளிக்கப்படும். apply.tnpscexams.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Jailor Notification 2019

TNPSC Jailor Notification 2019

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சிறை காவலர் (Jailor) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

Advertisment

இப்பணிக்கான விண்ணப்பம் வரும் அக்டோபர் 31க்குள் பெறப்படும். வரும் டிசம்பர் 22- ம் தேதி இப்பணிக்கான தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

காலியிடம்:

மொத்த இடம் - ஒன்று , அந்த ஒன்றும் பட்டியில் ஜாதியினருக்கு மட்டும்.  எஸ்சி, எஸ்சி(அருந்ததியர்) வகுப்பில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள்

சம்பளம்:  ரூ .36900 - 116600 (நிலை 18) தமிழ்நாடு படி திருத்தப்பட்ட ஊதியம் விதி, 2017 கீழ்

வயது வரம்பு:  வயது வரம்பு என்று எதுவும் இல்லை (அறிவிக்கப்பட்ட தேதியில் அல்லது 58 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது )

கல்வித் தகுதி:  

பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில் எந்த பட்டம் பெற்றிருந்தாலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் .

இருந்தாலும்,  குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் முடித்தோருக்கு முன்னுரிமை  அளிக்கப்படும்.

https://apply.tnpscexams.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment