/tamil-ie/media/media_files/uploads/2023/08/TNPSC-Group-4.jpg)
குரூப் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியானது.
Tnpsc | குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (ஏப்.24,2024) வெளியிட்டுள்ளது.
அதன்படி, துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையர், மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளில் 29 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1B, 1C தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கும்.
அதேபோல், 6244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூன் 9ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
மேலும், 2030 காலிப் பணியிடங்களுக்கான குரூப்2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பான முழுமையான தகவல்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.