Advertisment

தமிழக போலீஸ் வேலைக்கு ரெடியா? 2,599 காவலர்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு

தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1,819 ஆண் காவலர்களும், ஆயுதப் படைக்கு 780 பெண்கள் காவலர்களும் இந்த ஆண்டு பணியமர்த்தப்பட உள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Police Department 621 SI Posts Notification

தமிழ்நாடு போலீசில் 621 உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த ஆண்டு 2,599 காவலர்களை நியமிக்க தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் தற்போது காவல்துறையின் எண்ணிக்கை 1.34 லட்சமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு புதிய இரண்டாம் நிலை காவலர்களை (கான்ஸ்டபிள்) ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவில் தொடங்குமாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு காவல்துறையின் மாநிலத் தலைவரிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பழனி கோவிலில் 281 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க ஏப்.7 கடைசி நாள்

இதனையடுத்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1,819 ஆண் காவலர்களும், ஆயுதப் படைக்கு 780 பெண்கள் காவலர்களும் இந்த ஆண்டு பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை ஒரு மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம் கிட்டத்தட்ட காவல்துறையில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும். மேலும், 600 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான காலி பணியிடங்களும் இந்த ஆண்டு நிரப்பப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment